ஆயுத கடத்தல் தொடர்பில் நடிகை வரலட்சுமிக்கு அனுப்பப்பட்ட சம்மன்!!
கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் நடிகை வரலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியான குணசேகரன் என்பவரும் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை ஆதிலிங்கம் சினிமாவில் முதலீடு செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ஆதிலிங்கம் தொடர்பில் விசாரிக்க நடிகை வரலட்சுமி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது.
இதனிடையே நடிகை வரலட்சுமி தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.
ஆதிலிங்கத்தின் உறவினர் பாலாஜி என்பவர் போதைப்பொருள் கடத்தலில் தொடர்பில் இருப்பதன் மூலமாக விளிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் கடத்திய கும்பலைச் சேர்ந்த குணசேகரன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது விசாரணயில் உறுதியானது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG
https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை