புனித மைக்கேல் கல்லூயின் நடைபவனி!!

  


புனித மிக்கேல் கல்லூரியின் இந்த ஆண்டிற்கான நடைபவனி 30-09-2023 அன்று நடைபெற்றது. இந்த ஆண்டு தமது 150 ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் காரணத்தினால் என்றுமில்லாதவாறு மிகப்பிரமாண்டமான முறையில் இந்த நடைபவனி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்கள் எங்கும் இது தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் ஆக்கிரமித்திருக்கும் நிலையில் அதையெல்லாம் தாண்டி பலரதும் பாராட்டை இரண்டு மயூரன்கள் பெற்றுவருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது.

ஒருவர் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. உமாமகேஸ்வரன் மயூரன், மற்றையவர் புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் திரு. தேவதாசன் மயூரன்.

நடைபவனியின் இறுதியில் தேவதாசன் மயூரனும் அவரது நண்பர்களும் (06 batch பழைய மாணவர்கள்) ஒரு உழவு இயந்திரத்தைக் கொண்டு சென்றதுடன் வீதியில் காணப்பட்ட குப்பைகளை அகற்றியவண்ணம் சென்றனர்.

இந்த சூழல் நேயச் செயற்பாட்டிற்காகவும், பொறுப்புணர்விற்காகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் இவரைப் பாராட்டி வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.