படித்ததில் வலித்தது.!!

 


வாழ்வில் நாம் விடும் சிறு அசண்டையீனம் நம் வாழ்வையே தடம் மாற்றிவிடலாம் 


நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவதானிப்பு தேவை என்பதை ஹரியின் கதை வாசித்தபின்பு நன்றாக உணரமுடியும்.

ஹரி காலேஜில் படிக்கும் போது சுதாவை காதலித்தான். ஒரு நாள் ஒரு காதல் கடிதம் எழுதி, அதில் கீழே குறிப்பிட்டான்.


"நீயும் என்னை காதலித்தால், நாளை சிவப்பு நிற உடை அணிந்து வரவேண்டும்" என்ற அன்புக் கட்டளை இட்டு,  கடிதத்தை எழுதி ஒரு புத்தகத்தினுள் வைத்து சுதாவிடம் கொடுத்தான்.


அடுத்த நாள் அவன் ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் சுதா வெண்ணிற ஆடை அணிந்து வந்தாள். அவன் முதல்நாள் கொடுத்த புத்தகத்தை மீண்டும் அவனிடம் கொடுத்தாள். 

ஹரி முற்றாக மனம் உடைந்து போனான்.

அன்றிலிருந்து சுதாவைப் பார்ப்பதை முற்றாகத் தவிர்த்தான். 


வருடங்கள் உருண்டோடின......! சுதாவுக்கு வேறு திருமணம் நடந்தேறியது.


ஒருநாள் ஹரி தனது அலுமாரியை ஒதுக்கிக்கொண்டிருந்தான். அன்றொருநாள் சுதா திருப்பிய புத்தகம் அலுமியில் இருந்து கீழே விழுந்தது. அதிலிருந்து ஒரு கடிதம் வெளியே தெரிந்தது. 


அதில் சுதா எழுதியிருந்தாள்....

"நானும் உன்னைக் காதலிக்கிறேன் ஹரி. மன்னித்து விடு என்னிடம் சிவப்பில் உடை இல்லைடா"


நம்மட மைண்ட் வொயிஸ்....." அட பன்னாடைப் பயலே படிக்கிற புத்தகத்த திறந்து பார்க்கமாட்டியா....?"


அருந்ததி குணசீலன் 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.