2024 தொடர்பில் பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!

 


பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் பகீர் கணிப்புக்கள் வைரலாகி வருகின்றது.

பல்கேரிய நாட்டை சேர்ந்த  பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்து 1996ல் மரணமடைந்தார்.

இவர் சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்ததாக கூறப்படும் நிலையில், அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.

சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளதால் உலகளவில் இவரது கணிப்புக்கள் மிக பிரபலம்.

குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, இங்கிலாந்து இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் போன்றவை இவரது கணிப்புகளில் நிஜமாகியுள்ளன.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும் எனவும் புற்றுநோய்க்கான தீர்வு கண்டுபிடிக்கப்படும், குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும், ரஷிய அதிபர் புதின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார் எனவும் பாபா வங்கா கணித்துள்ளதாக  கூறப்படுகின்றது.

அதோடு ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் என்பதுடன்,  ஒரு "பெரிய நாடு" அடுத்த ஆண்டு அணு ஆயுத சோதனைகள், தாக்குதல்களை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், மர்ம நோயால் பாதிக்கப்படுவார்.

சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும். ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள் என கணித்து எச்சரித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.