யாழ்ப்பாணத்தில் மஹிந்தவின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

 


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்ததினத்தை யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் சிலர் கொண்டாடிய காணொளியினை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பகிர்ந்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் பிறந்ததினம் நேற்று முன்தினம் (18) கொண்டாடப்பட்டது.

இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்ததினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.

இது தொடர்பான காணொளிகளை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அதேவேளை மஹிந்தவின் பிறந்தநாளை விழாவில் பங்குபற்றியவர்களில் பலர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.   

இந்நிலையில்  எம்மினத்தை  கருவறுத்தவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் , யாழில் கொண்டாடப்பட்டுள்ளமை சமூக ஆர்வரகள் மத்தியில்  பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

அதேவேளை  இதன் பின்னனியில் சில  தமிழ் அரசியல்வாதிகளும்  உள்ளதாகவும்  சமூக வலைத்தளங்களில்  கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும்  யாழ்ப்பாணத்தில் அண்மைகாலமாக இடம்பெறும் சம்பவங்கள்    தமிழர்களின்  கலாச்சாரத்தை கேள்விக்குறியாக்கும் விதமாக  அமைந்துள்ளமை  பெரும் கவலையை தோற்றுவித்துள்ள நிலையில்,  தன்  இனத்தின் அழிவுக்கு காரணமானவரின்  பிறந்ததினம்   கொண்டாடப்பட்டுள்ளமை ,  விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர் முடிந்து தசாப்தம் கடந்துள்ளபோதும் , காணாமல் ஆக்கப்பட்ட தம்முறவுகளுக்கான  நீதிவேண்டி ஆயிரக்கணக்காணோர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,  அதற்கு காரணமான ராஜபக்சவின் பிறந்தநாளை தமிழ் இளைஞர்கள் சிலர் கொண்டாடியுள்ளமை அருவருக்கதக்க ஒன்றாகும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.