யாழில் ஒருவர் அடித்துக் கொலை!!

 


யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியில் முதியவரொருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் யாழ் உரும்பிராய் தெற்கு பகுதியில் நேற்றைய தினம் இரவு (19-11-2023) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்கிற 66 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார்.

உணவகம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவரும் நிலையில் அதே பகுதியை வாய் பேச இயலாத சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடந்த இடத்தில் யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.