மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

 


கிளிநொச்சி - கண்டாவளை பகுதியில் அனர்த்தம் ஏற்படும் முன்னர் மரத்தை அகற்றிவிடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட A35 பிரதான வீதியின் தருமபுரம் வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதி ஓரமாக நின்ற 60 வருடங்களை கடந்த பாரிய ஆலமரம் ஒன்றின் கிளை சில தினங்களுக்கு முன்னர் வீதியில் முறிந்து விழுந்துள்ளது.

அதன் மறுகிளையும் முறிந்து விழும் நிலையில் காணப்படுவதுடன், அந்த மரமும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.

இதனால் இவ்வீதி ஊடாக தினமும் பயணிக்கும் மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் மரம் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே அனர்த்தம் ஏற்படுவதற்கு முன் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.