சபரிமலை சபரீச ஜயப்பன் தீர்த்தோற்சவம்..!!


வரலாற்றுச்சிறப்புமிக்க கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பன் தேவஸ்தானத்தின் 10ஆம் நாள் தீர்த்தோற்சவம் 15.12.2023 பக்திபூர்வமாக இடம்பெற்றன 

இவ்வாலயத்தின் வருடாந்த கொடியேற்றம் 06.12.2023 இடம்பெற்றன

கருவரையில் வீற்றுயிருக்கும் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பனும்,மற்றும் மடசாமிக்கும்,கருப்பானசாமிக்கும் விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றன 

பின்னர் வசந்த மண்டபத்தில் அருள் பாலித்த ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பன் தீபராதனைகள் இடம்பெற்று அங்குயிருந்து எழுந்தருளிய எம்பெருமான் பீடத்தில்வீற்று உள்வீதியுடாகவும், தீர்த்தம் நீராடுவதற்கு தீர்த்தகேணியில் தீர்த்தமாடி வெளிவீதியுடாக வலம் வந்து அருள்பாலித்தார்.

ஆலயபிரதம குரு குருமாமணி கி.ஹரிஹரசுதச் சிவாச் சாரியரினால் நடாத்திவைக்கப்பட்டன.

இவ் மஹோற்சவத்தில் 15.12 மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்

இதில் பலபாகங்களில் இருந்து வருகை தந்த குருமார்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.