22 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது!!


அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 படகுகளுடன், 22 தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்றிரிவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்பரப்பில், கடற்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 3 படகுகளுடன், 14 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்றிரவு, காங்கேசன்துறை கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கைதான அனைத்து கடற்றொழிலாளர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.