முல்லைத்தீவில் மாணவர் கௌரவிப்பு!!

 


மல்லாவியில் க. பொ. த சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

முல் முல்லைத்தீவில் லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட யோகபுரம் மகா வித்தியாலயத்தில் இன்றையதினம் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் பல்கலைகழகத்திற்குத் தெரிவாகிய மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. 

இந்த நிகழ்வு யோகபுரம் மகா வித்தியாலய முதல்வர் பிறேம்குமார் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் துணுக்காய் கல்வி வலய பணிப்பாளர் மாலதி முகுந்தன் மற்றும் அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் அதிதிகளால் சாதனை மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், நினைவு சின்னங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.