மீட்பின் இரட்சகரே......!!
மீட்பின் இரட்சகரே
மீண்டும் பிறப்பீரோ..
இழந்த எம் இருப்பை
சிறை மீட்டுத் தருவீரோ...
பெத்லகேம் பிறந்தவரே
பேரன்பின் நேசகரே
இவ்வுலகை மீட்டிடவே
இரட்சகராய் பிறந்தீரே...
கன்னித்தாய் வயிற்றில்
கருவாக உருவாகி
மாட்டுத் தொழுவத்தில்
மாதேவன் பிறந்தீரே...
"உன்னதங்கள் எல்லாம்
உயர்வில் உதிப்பதில்லை"
ஆழ் தத்துவத்தை
அகிலம் புரிந்ததையா...
முட்காடு பூக்கவும்
பூக்காடு செழிக்கவும்
காயங்கள் ஆறவும்
கருணையின் நாயகனாய்
காவியனே நீர் உதித்தீர்.
இறைமகன் பிறந்ததால்
இருளது மறைந்தது.
காலம் கரைகையில்
பேரிருள் சூழ்ந்ததே...
மீட்பின் இரட்சகரே
மீண்டும் பிறப்பீரோ..
இழந்த எம் இருப்பை
சிறை மீட்டுத் தருவீரோ...
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை