இலங்கை வரும் பிரித்தானிய இளவரசி!!

 


பிரித்தானிய இளவரசி அன்னே (Anne, Princess )எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அவர், நாட்டில் 13 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசி அன்னேவுடன் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் டிம் லோரன்ஸூம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

அதேவேளை இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே பிரித்தானிய இளவரசி அன்னே மற்றும் கணவர் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.