20-21ஆம் திகதிகளில் சிறுவர்களுக்கு தடுப்பூசி!

 


இதுவரை தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்படாத சிறுவர்களுக்கு எதிர்வரும் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம். ஆர்னல்ட் இதனை தெரிவித்துள்ளார்.


9 மாதங்கள் முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு குறித்த தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், 6 மாதம் முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கான  தட்டம்மை தடுப்பூசியும்  எதிர்வரும் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் செலுத்தப்படும்.அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு சென்று குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.