நோர்வே நாட்டில் தமிழ் பெண்ராகவி வரதராஜன் (30)வயது படுகொலை செய்யப்பட்டுள்ளளார் !


கடந்த செவ்வாய்க்கிழமை (02.01.2024) நோர்வேயின் எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


இவர் புத்தாண்டு தினத்தன்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் உடலில் பல துப்பாக்கி சூடு காயங்கள் இருந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சடலம் கண்டெடுக்கப்பட்ட காரிலிருந்து கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை மிரட்டல் தொடர்பில் உயிரிழந்த பெண் பல தடவைகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததோடு அது தொடர்பில் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என குடும்பத்தினர் முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

32 வயதான அந்த இளைஞன்ராகுல் யோகராஜா (32)வயது 

 தொடர்பில் யுவதி,  பொலிசில் முறையிட்டதை தொடர்ந்து,  அவரை தொடர்பு கொள்ள  இளைஞருக்கு  தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தபோதும் ,  இளைஞன் அதை தொடர்ந்து 7 முறை மீறியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர் பல்மருந்துவர் என்பதோடு நீண்ட காலமாக இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குற்றம் சாட்டப்பட்ட ஆண் (32) படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார் , இருவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகவும்   கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என போலீசார் கருதும் ஆயுதம் கிடைத்ததாகவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொலைக்குற்றம் சாட்டப்பட்ட நபர் தொடர்பில்   பொலிஸாருக்கு பலமுறை யுவதி  முன்கூட்டியே அறிவித்திருந்தார் என்றும் கூறப்படுவதுடன்,  உயிரிழந்த தமிழ் யுவதி ஓஸ்லோவில் பல் மருத்துவப் படிப்பை முடித்தவர் என்றும் கூறப்படுகின்றது.








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.