கடந்த ஆண்டு 9 இலட்சம் பாஸ்போர்ட்டுகள் தயாரிக்கப்பட்டன!


கடந்த ஆண்டு (2023) 9,10,497 இலங்கையர்கள் வெளிநாடு செல்வதற்கு தயாராகி கடவுச்சீட்டைப் பெற்றதாக குடிவரவுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .கடந்த ஆண்டில் கடவுச்சீட்டு வழங்கியதன் மூலம் திணைக்களம் 4,100 கோடி ரூபாவை ஈட்டியுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் பிரதான அலுவலகம் உள்ளிட்ட பிராந்திய அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,500-2,700 வரை உள்ளதாகவும் கூறப்படுகிறது.பத்தரமுல்லை, வவுனியா, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள குடிவரவு பிராந்திய அலுவலகங்கள் அந்த சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன.

இதேவேளை, கடந்த வருடம் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 7,387 என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மற்ற ஆண்டுகளை விட கடந்த ஆண்டு வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.