சுற்றுலா பயணிகள் விபத்தில் மரணம்!!

 


காலி – மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் பஸ் ஒன்று மோதிய விபத்தில் வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்துடன் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.