பெண்ணொருவரின் மோசமான செயல்¡!

 


கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 14 பேரை ஏமாற்றி தவணை முறையில் 20 - 75 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்ட பெண் கைதாகியுள்ளார்.

இத்தகவலை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. கனடாவில் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த சிலர், பெண்ணின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்துள்ளது.

சந்தேகநபரான பெண் , அவர்களுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்துவழங்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது .

குருணாகலை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட பொத்துஹெர, கொட்டாஞ்சேனை, நீர்கொழும்பு, வத்தளை ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களே இவரது பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்துள்ளனர் .
கைதான 37 வயதுடைய சந்தேக நபர் வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது . 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.