சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தை!
புத்தளத்திலிருந்து காமன்ட் வத்தைக்கு செல்லும் வீதியில் உள்ள மதகுக்கு கீழ் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கரம்பை, தேத்தாப்பொல காமன்ட் வத்தை பகுதியைச் சேர்ந்த 55 வயதான உதயகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபரின் மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், இரு பிள்ளைகளையும் குறித்த நபரே பராமரித்து வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில், கடந்த முதலாம் திகதி குறித்த நபர், வீட்டிலிருந்து வெளியேறிச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் மது அருந்தும் பழக்கமுடையவர் எனவும் மதகுக்கு மேல் இருந்து மது அருந்திய நிலையில் இவ்வாறு மதகுக்கு கீழ் செல்லும் நீருக்குள் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எஸ்.பிரேமசிறி தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை