காஷாவில் சுரங்கப்பாதை!!

 




கடந்த காலங்களில் பணயக்கைதிகளை சிறைவைத்திருந்த காசாவின் சுரங்கப்பாதையை இஸ்ரேலிய வீரர்கள் கண்டுபிடித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் உள்ள ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் ஹமாஸால் கடத்தப்பட்ட சுமார் 20 பணயக்கைதிகளை சிறைவைத்திருந்த சுரங்கப்பாதையையே இஸ்ரேலியப் படைகள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நவம்பரில் ஏழு நாள் போர் நிறுத்தத்தின் போது, ​​ஒரு குழந்தை உட்பட பொதுமக்கள் பலர் இங்கு பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதுடன், இங்கு சிறுவர்கள் வரைந்த ஓவியங்களையும் இஸ்ரேலிய படையினர் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.

உலோகக் கம்பிகளுக்குப் பின்னால் ஐந்து குறுகிய அறைகள், கழிப்பறைகள், மெத்தைகள் மற்றும் நவம்பர் மாதப் போர் நிறுத்தத்தின் போது விடுவிக்கப்பட்ட ஒரு குழந்தை பணயக்கைதியின் வரைபடங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.