நாளைய தினம் ஜனாதிபதி புத்தூர் விஜயம்
வட மாகாணத்துக்கு நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , நாளைய தினம் புத்தூர் பகுதியில் அமைந்துள்ள வாழைப்பழ ஏற்றுமதி நிலையத்துக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக இந்த செயல் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. வாழைப்பழ ஏற்றுமதி மூலம் எவ்வாறு அந்நிய செலவினையை பெற்றுக் கொள்ள முடியும் என்பது தொடர்பில் ஜனாதிபதி நாளை குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார், அத்துடன் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகளுடனும் அவர் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளார்.
கருத்துகள் இல்லை