பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்!

 


பிலியந்தலை பகுதியில் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் நடன ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிலியந்தலை பெலன்வத்தை பகுதியில் வகுப்பு முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 12 வயதான சிறுவனை நடன ஆசிரியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது சந்தேக நபரின் உடலைப் பிடித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு தனது அந்தரங்கைப் பகுதியை காட்டி அதனைப் பிடிக்குமாறு கூறி சிறுவனை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மாணவனை ஏற்றிச் சென்றபோது நடந்து கொண்ட விதம் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேக நபரான ஆசிரியரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.