பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில்!!

 


சப்ரகமு பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 13 மாணவர்களும் இன்றையதினம் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது 13 பேரையும் எதிர் வரும் 15 திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு பலாங்கொடை மேலதிக நிதிமன்ற நீதிபதி (ஹேஸானி ரொந்ரிகோ) உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்ட 7 மாணவர்கள் மற்றும் இன்றையதினம் கைது செய்யப்பட்ட 6 மாணவர்கள் உட்பட 13 பேரே இவ்வாறு மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 9 திகதி இரவு சப்ரகமு பல்கலைக்கழக விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த மூன்று மாணவர்கள், பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்களால் தக்கப்படு பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.