விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு!!
யாழ்ப்பாண பகுதியில் அம்பூலன்ஸ் வண்டி மோதியதில் படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 54 வயதான சண்முகதாஸ் தர்மதாஸ் என்ற வர்த்தகரே நேற்றையதினம் (17-02-2024) உயிரிழந்துள்ளார்.
யாழ்.நகர் பகுதியில் வர்த்தக நிலைய ஒன்றை நடத்தி வந்த அவர், கடையை மூடி விட்டு, மோட்டார் சைக்கிளில் தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை, ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் அம்பூலன்ஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானார்.
இந்த நிலையில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை