இந்தியாவில் 200 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல்!


டெல்லியில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ போலி பெட்ரோலியம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில், இந்த போதைப் பொருளை கடத்திய 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரே இந்த கடத்தல் கும்பலுக்கு பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.

எனவே, அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தலைமறைவாக உள்ள அவரைத் தேடும் பணியில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 45 முறை சர்வதேச சந்தைகளுக்கு போதைப்பொருள் கடத்தியுள்ளதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.2000 கோடிக்கு மேல் என்றும் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.