கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று பிற்பகல் 4.30 மணியளவில் கொம்மாதுரை பகுதியில் இருந்து பேரணியாக வந்த மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது வழங்கும் மகாபொல கொடுப்பணவை அதிகதிரிக்க வேண்டும், புதிதாக இணைந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 6 மாதமாக மகாபொல வழங்கப்படவில்லை, மாணவர்கள் தங்கும் விடுதியில் மருத்துவ வசதி இல்லை , நிரந்தர வைத்தியர் வேண்டும், இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி இல்லை, விரைவில் வழங்குவதாக கோரியும் விடுதி வழங்க இழுத்தடிப்பு செய்கின்றமை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை