தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!!

 இந்தியாவில் கடந்த நாட்களில்


தங்கத்தின் விலை சற்று சரித்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலையானது உயர்வடைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

அந்தவகையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி , 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,760-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 4,718-க்கும் சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ. 37,744-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.