புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்!!

 


மட்டக்களப்பில் முழு நேரமாக களத்தில் நின்று ஊடகப் பணிபுரியும் பல ஊடகவியலாளர்களை வெகுசன ஊடக அமைச்சினால் நடத்தப்படும் ஊடக செயலமர்விற்குள் உள்வாங்காது புறக்கணிதுள்ளமை ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றையதினம் திருகோணமலையில் இடம் பெற்று வரும் வெகுச ஊடக அமைச்சினால் நடத்தப்படும் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட முழு நேர ஊடகவியலாளர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மாவட்ட செயலக தகவல் திணைக்களம் பிழையான தகவல்களை வழங்கி வருகின்ற நிலையில் அவர்களது பிழைகளை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்களை திட்டமிட்டு புறக்கணித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று வெகுசன ஊடக அமைச்சு நடத்தும் செயலமர்வில் மட்டக்களப்பு தகவல் திணைக்கள அதிகாரிகளும், முகநூல் பக்கத்தில் பதிவிடுபவர்களும், அரச அதிகரிகளும், பகுதி நேர ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டு திருகோணமலை செயலமர்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.