வீதிகளில் உலரவிடும் நெல் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!


தார்ப்படுக்கை வீதிகளில் உலரவிடும் நெல் நஞ்சுத் தன்மைகொண்டவையாக மாற்றமடைவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாய அறுவடைக்கு பின்னரான தொழில் நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2024-02-08 அன்று மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றபோதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தார்ப்படுக்கை வீதிகளில் உலரவிடும் நெல் இரசாயனத் தன்மை கொண்டவையாக மாற்றமடைவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாய அறுவடைக்கு பின்னரான தொழில் நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார் வீதி, பரந்தன் முல்லைத்தீவு வீதி, புளியங்குளம் நெடுங்கேணி வீதியென வடக்கின் பெரும்பாலான பிரதான வீதிகளில் நெல் அறுவடை காலங்களில் நெல் உலரவிடுவது என்பது பலரின் விமர்சனத்திற்கும் சிலரின் பரிதாபத்திற்குமான விடயமாக மாறிவிட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.