கடலில் காணாமல் பெற மாணவர்கள்!!

 


அம்பாறை - சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த இரு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இச்சம்பவத்தில் மாளிகைக்காடு - சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் பயிலும் 13-15 வயதுக்குட்பட்ட மாணவர்களே காணாமல் போய்யுள்ளனர்.

இன்று (16-02-2024) 08 மாணவர்கள் ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

பின்னர் மாலை 04.20 மணி அளவில் இருவரை கடலலை உள்ளிழுத்து சென்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கடலில் இழுத்து காணாமல் போன மாணவர்களை மீனவர்களும், பொதுமக்களும் இயந்திர படகுகளை கொண்டு தேடியும் இன்றிரவு 09.00 மணி வரை அந்த மாணவர்களின் உடலை கண்டுபிடிக்க முடியாமல் இருள் காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய 6 மாணவர்களும் அவர்கள் பயணித்த துவிச்சக்கர வண்டிகளும் நிந்தவூர் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.