பச்சிளம் குழந்தையை விட்டு விட்டு பெற்றோர் செய்த காரியம்!!

 


கலஹா லுல் கந்துர தோட்டத்திலுள்ள , லைன் அறையில் 5 1/2 மாத குழந்தையை வாடகை அறையில் விட்டுவிட்டு வெளிநாடு சென்ற இளம் தம்பதி தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் இருந்து தற்காலிக வதிவிடமாக தங்க வந்ததாகவும், அவர்கள் வரும் போது அங்கு வசித்து வந்த பெண் மனநோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் (22) அந்த லைன் அறையில் வசிக்கும் ஒருவரை தொடர்பு கொண்டு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட தம்பதிகள் , தாங்கள் வெளிநாடு செல்வதால் அறையில் விட்டு வந்த குழந்தையை பார்த்துக் கொள்ள யாரையாவது ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளனர்.

இது தொடர்பில் தோட்ட நிர்வாக அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , குடும்ப நலப் பணியாளர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அறையில் குழந்தை அழுது கொண்டிருந்தது.

தெல்தோட்டை வைத்தியசாலையில் தாய்ப்பால் ஊட்டும் வசதிகள் இல்லாத காரணத்தினால் , குழந்தையை பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகின்றது.

மீட்கப்பட்ட குழந்தையை குடும்ப நலப் பணியாளர்கள்  தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கலஹா தெல்தோட்டை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கபில அத்தபத்து தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.