அத்தியாவசிய பொருட்களின் புதிய விலை!


நாட்டில் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பல அத்தியாவசிய பொருட்களின் விலையை லங்கா சதொச குறைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (15-02-2024) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை குறைப்பு இன்று (15) முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்த அவர், 08 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குறைக்கப்பட்ட பொருட்களின் விலை பட்டியல் இதோ,

சிவப்பு கௌபி – 1095 ரூபா, வெள்ளை கௌபி – 1200 ரூபா,  சிவப்பு வெங்காயம் – 325 ரூபா,  முந்திரி – 1300 ரூபா, டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 425 கிராம் – 575 ரூபா,  காய்ந்த மிளகாய் – 1210 ரூபா,  வெங்காயம் – 365 ரூபா, வெள்ளை சீனி – 275 ரூபா,  உருளைக்கிழங்கு – 299 ரூபா,  சிவப்பு அரிசி – 174 ரூபா,  டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 155 கிராம் – 290 ரூபா,  மற்றும் பாஸ்மதி அரிசி (பிரீமியம்) – 760 ரூபாவுக்கு விற்கப்படவுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.