இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

 


இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு விவசாயத் துறையில் வேலைக்குச் செல்லவுள்ள 95 தொழிலாளர்களுக்கு விமானப் பயணச்சீட்டுகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வழங்கியுள்ளார்.

இதன்படி, நாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு இதுவரை விவசாயத் துறையில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செவிலியர் பணிக்கு செல்லும் 54 தொழிலாளர்களுக்கும் விமான பயணச்சீட்டு வழங்கப்பட்டதில் 49 பெண்களும் 5 ஆண் செவிலியர்களும் அடங்குகின்றனர்.

இஸ்ரேலில் தாதியர் பணிகளுக்காக 500 தொழிலாளர்களுக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதைவிட அதிகமான தொழிலாளர்களை அனுப்ப முடிந்துள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

இதேவேளை, இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கான சேவை ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொள்வதை துரிதப்படுத்துவது தொடர்பில் இஸ்ரேல் விவசாய அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்றவுள்ள தொழிலாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.