மலை ஏறாமல்

 


நேற்று (22) ராவணஎல்லையை பார்வையிட வந்த நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் இலக்கம் 172/4, மொரகல்ல, பேருவளையில் வசிக்கும் 32 வயதுடைய சந்தரதுர நாதிரா மதுசங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.


இவர் நேற்று (22) காலை மற்றுமொரு நண்பருடன் எல்ல மலைத்தொடரில் ஏறியதாகவும், மாலை 5:30 மணியளவில் அதிலிருந்து கீழே இறங்கச் சென்ற போது, ​​ பாறையில் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் வெள்ளவாய ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

சடலம் வெல்லவாய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.