IPL 2024: வெளியான அட்டவணை! முதல் போட்டியில் மோதும் சென்னை!


மார்ச் 22 ஆம் தேதி முதல் ஐ.பி.எல் தொடர் தொடங்கவிருப்பதாகவும் முதல் போட்டியிலேயே சென்னை அணி ஆடவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை அணியும் பெங்களூர் அணியும் மோதும் சீசனின் முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.


நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7 ஆம் தேதி வரைக்குமான போட்டி அட்டவணையை மட்டுமே ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த முதல் இரண்டரை வாரத்தில் மொத்தமாக 21 போட்டிகள் நடைபெறவிருக்கிறது.


அறிவிக்கப்பட்டிருக்கும் அட்டவணைப்படி சென்னை அணி ஏப்ரல் 7 வரை நான்கு போட்டிகளில் ஆடுகிறது. பெங்களூருவிற்கு எதிரான முதல் போட்டி சேப்பாக்கத்தில் வைத்து நடக்கிறது. சென்னை அணியின் இரண்டாவது போட்டியும் குஜராத்துக்கு எதிராக மார்ச் 26 ஆம் தேதி சென்னையிலேயே நடக்கிறது. அதன்பிறகு, டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக சென்னை ஆடும் போட்டிகள் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத்தில் வைத்து நடைபெறுகின்றன.


அதேமாதிரி, மும்பை இந்தியன்ஸ் அணியும் 4 போட்டிகளில் ஆடுகிறது. அந்த அணி முதல் போட்டியில் குஜராத்தை மார்ச் 24 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொள்கிறது. அடுத்து சன்ரைசர்ஸ் அணியை 27 ஆம் தேதி ஹைதராபாத்தில் எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளை ஏப்ரல் 1 மற்றும் 7 தேதிகளில் மும்பையில் வைத்தே எதிர்கொள்கிறது.


#IPL2024 | #CSKvRCB | #IPLSchedule

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.