சிக்கலில் சிக்குவாரா வனிந்து ஹசரங்க!
இன்றும் நடுவரை விமர்சித்ததால் மீண்டும் சிக்கலில் சிக்குவாரா வனிந்து ஹசரங்க
பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரை இலங்கை இழந்ததைத் தொடர்ந்து, 3வது ஒருநாள் போட்டியின் போது நடுவரை விமர்சித்ததற்காக வனிந்து ஹசரங்க மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளார் .
ஹசரங்காவின் நடத்தை தொடர்பாக நடுவர் போட்டி நடுவரிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் விதிமீறல்களினால் பெறப்பட்ட புள்ளிகளுடன் , ஹசரங்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பல சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் வாய்ப்பு உண்டு .
இலங்கை அணி அடுத்ததாக பங்களாதேஷ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது .
மேலும் சமீபத்தில் தனது டெஸ்ட் ஓய்வை வாபஸ் பெற்ற ஹசரங்க , டெஸ்ட் அணியில் உள்ளடக்கப்பட்டுளார் .
கருத்துகள் இல்லை