சிக்கலில் சிக்குவாரா வனிந்து ஹசரங்க!

 


இன்றும் நடுவரை விமர்சித்ததால் மீண்டும் சிக்கலில் சிக்குவாரா வனிந்து ஹசரங்க

 


பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரை இலங்கை இழந்ததைத் தொடர்ந்து, 3வது ஒருநாள் போட்டியின் போது நடுவரை விமர்சித்ததற்காக வனிந்து ஹசரங்க மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளார் .


ஹசரங்காவின் நடத்தை தொடர்பாக நடுவர் போட்டி நடுவரிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .


ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் விதிமீறல்களினால் பெறப்பட்ட புள்ளிகளுடன்  , ஹசரங்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பல சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் வாய்ப்பு உண்டு .


இலங்கை அணி அடுத்ததாக பங்களாதேஷ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது .


மேலும் சமீபத்தில் தனது டெஸ்ட் ஓய்வை வாபஸ் பெற்ற ஹசரங்க ,  டெஸ்ட் அணியில் உள்ளடக்கப்பட்டுளார் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.