புதிய நுழைவாயில் திறந்து வைப்பு!📸
ஹொ/நிக்கவெவ முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய நுழைவாயில் திறந்து வைப்பு!
அனுராதபுரம் மாவட்டம் கெப்பித்திக்கொள்ளாவ கல்வி வலயத்திற்குட்பட்ட நிக்கவெவ முஸ்லிம் வித்யாலயத்தின் புதிய நுழைவாயில் உத்தியோபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
"எமது பாடசாலையின் பௌதீக வளங்களை மேம்படுத்தல்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் அந்நஜாஹ் அகடமியின் ஒருங்கிணைப்பில் கிராம மக்களின் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நுழைவாயில் திறப்பு விழா (07) பாடசாலை அதிபர் ஏ.ஜே.எம்.தௌபீக் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக
கெப்பித்திக்கொள்ளாவ வலய கல்வி பணிப்பாளர் ருவன் மைத்திரிபால மற்றும் வலயக்கல்வி பணிமனையின் தமிழ் பிரிவு பணிப்பாளர் எஸ்.முகம்மட், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ஏ.எம்.உவைஸ், அந்நஜாஹ் அகடமியின் தலைவர் எஸ்.எம்.சதாத் உட்பட பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை