தலைவன் இல்லாதபோதும் எம் தேசம் எழுகை கொள்ள மறந்ததா?
பேசாமல் பேச வைப்பான் எம் அண்ணன்!
தலைவன் இல்லாதபோதும் எம் தேசம் எழுகை கொள்ள மறந்ததா?
மடை மாற்ற எத்தனை சக்திகள் முயன்றன? மக்கள் படை தன் எழுச்சி வரலாறை எழுத மறுத்ததா?
இனத்தை அடக்குவதற்காக ஏழு தமிழரை அநீதியாக வதைத்தனர்!
சாந்தன் அண்ணாவின் இளமையும் உயிரும் இன வன்மத்தில் பறிக்கப்பட்ட பின்பு வெறும் கூடு மட்டும் தானே எனத் தாயகம் எடுத்துச் செல்ல அனுமதித்தனர்!
ஆனால் சாந்தன் அண்ணாவின் 33 ஆண்டு கால இன வலி தியாகம் எழுச்சித் தீயைப் பற்றிப் படரவைக்கும் என கனவிலும் பகைவர் நினைத்திரார்!
இதோ இனத்தின் தலைவன் எம் அண்ணன் இவன் என்று அவர் பிறந்த வீட்டையும் எழுகை கொண்ட மக்களோடு சாந்தன் அண்ணாவின் உயிர் பிறந்த கூடு விடுதலை உணர்வோடு வணங்கிச்்செல்கின்ற பேறு பெற்றது!
தடைகள் தமிழர் எழுச்சஇயைப் பூட்டி வைக்க முடியாது!
கருத்துகள் இல்லை