நூதனமாக கார் திருட்டு!!

 


காரை வாங்குவதற்கு முன் சோதனை ஓட்டம் நடத்துவதாக கூறி, காரை திருடிச் சென்ற ஒருவர் ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை ஹொரணையில் உள்ள மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் தனது காரை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்த நிலையில் 3.3 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த காரை கொள்வனவு செய்ய வந்த நபர் ஒருவர் அதனை வாங்குவதற்கு முன்னர் சோதனை ஓட்டத்திற்கு செல்வதாக கூறி எடுத்துச் சென்றுள்ளார்.

நான்கு நாட்களுக்குப் பின்னர் வாத்துவ, வேரகம என்ற இடத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

வழித்தடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி, சந்தேக நபர் காரை கொள்வனவு செய்யும் போர்வையில் வந்து, அதனைப் பரிசோதிப்பதாகக் கூறி, ஹொரணை – கனன்வில வீதியில், மென்பொறியாளரையும் காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

மயானம் அருகே காரை நிறுத்திவிட்டு என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, அந்த நபர் திடீரென பிரேக்கை அழுத்தி காரை நிறுத்தினார். அப்போது, சந்தேகநபர் காரை பரிசோதிப்பதை போல பாசாங்கு செய்துள்ளாார்.

சந்தேகநபர் காருடன் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் ஜீவாதாரத்திற்காக கார்களை பழுதுபார்ப்பவர் எனவும், இந்த சம்பவத்திற்கு முன்னர் எந்தவொரு திருட்டுச் சம்பவத்திலும் பொலிஸாரிடம் சிக்கவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.