தாயாரின் நினைவு தினத்தில் தானம் செய்து மனம் நிறைந்த மகள்!!

 


புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் புலம்பெயர் உறவு ஒருவர்  தனது தாயாரான பராசக்தி இராசேந்திரம் அவர்களின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு  தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமை நிலையில் இருக்கும் சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். 


தமது தாயாரின் நினைவு நாளினை ஒவ்வொரு வருடமும் வறுமை நிலையில் உள்ளோர்க்கு உதவி புரிந்து நினைவு கூரும் மகளிற்கும் அவரது குடும்பத்து உறவுகளுக்கும் பயனாளர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளதோடு ஆத்மா சாந்திபெறவும் பிரார்த்தித்துள்ளனர்.


 இவர்களின் உதவிப்பணி குறித்து சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.