100 ஆண்டுகளுக்கு பின் அபூர்வ நிகழ்வு!!
வானில் 100 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வ சந்திரகிரகணம் இன்றையதினம் முதன் முறையாக நிகழ்கிறது.
முன்னதாக இப்படியொரு சந்திர கிரகணம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். இந்த சந்திர கிரகணத்தை இலங்கை மற்றும் இந்தியா காணமுடியாது.
எனினும், அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, பிரித்தானியா, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காண முடியும்.
இந்த கிரகணம், இலங்கை நேரப்படி காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 03:02 வரை 4 மணி 36 நிமிடங்கள் வரை நீடிக்கும். இலங்கையில் இது பகல் பொழுதில் நிகழ்வதால் நம்மால் பார்க்க இயலாது.
கருத்துகள் இல்லை