முருகனை லண்டனுக்கு போக விடாமல் தடுப்பது யார்!!

 


தமிழகத்தில் உள்ள சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் தமது சொந்த செலவில் நாட்டைவிட்டு வெளியேற விரும்பினால் உடனே அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் படியே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டு விடுதலையாகி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள முருகன் லண்டனில் உள்ள தன் மகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கேட்டு வருகிறார்.

எனினும் தமிழக அரசாங்கம் அவரது விருப்பத்திற்கு மாறாக அவரை இலங்கைக்கு அனுப்ப உயர்நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஈழத் தமிழரை பலவந்தமாக அவர்கள் விருப்பத்திற்கு மாறாக இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றத்திடம் இருந்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் பெற்றுக்கொடுத்தவர்.



தமிழக அரசின் இந்த சட்டவிரோத போக்கை கண்டிக்க வேண்டியவர்கள் இதுதான் சட்டநடைமுறை என தமிழக அரசை நியாயப்படுத்த முயல்கிறார்கள்.

இதே ராஜிவ் காந்தி வழக்கில் மரண தண்டனை பெற்றவர்களில் ஒருவர் ரங்கன். உச்சநீதிமன்றம் இவரது மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது. அப்போது இவர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறி லண்டன் வந்தார். லண்டனில் அவர் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகையில் 2012ல் மரணமடைந்துள்ளார்.

இங்கு எனது கேள்வி என்னவெனில் இதே ராஜிவ் காந்தி வழக்கில் இருந்த ரங்கன் லண்டன் வந்து வாழ இடங்கொடுத்த சட்டநடைமுறை இப்போது எப்படி முருகனுக்கு மறுக்கிறது? ஒரே காரணம்தான். அப்போது தமிழக முதல்வராக ஸ்டாலின் இருக்கவில்லை என முகநூலில் தோழர் பாலன் என்பவர் இந்த பதிவை இட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.