புரட்சியில் விழித்தோம்!!

 



இன்று நாம் 


பனிப் புயலின் 


புரட்சியில் விழித்தோம்


எங்கள் நிலப்பரப்பு 


மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது 


வெள்ளைக் கொடி பிடித்து 


சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் 


கட்டிடங்கள் பனியில் மூழ்கின 


பள்ளிகள் களை இழந்தன 


தபால் சேவை முடங்கியது 


இப்போதைக்கு நான் 


எங்கள் வீட்டில்  


சிறை வைக்கப்பட்டுள்ளேன் 


ஆனால் 


கொஞ்ச நேரத்தில் நான் 


பூட்ஸ் போடுவேன்


விண்வெளியில் நடப்பது போல 


நிறை தண்ணீரில் மிதப்பது போல 


வெளியில் உலாவுவேன்


வழியை மூடிய 


பனியை அகற்றி 


புதுப்பொலிவு செய்வேன் 


எங்கள் குழந்தைகள் 


இன்னும் சற்று நேரத்தில் 


ஜாக்கெட்டுகளை அணிவார்கள்


அங்கு கூடுவார்கள்


குதிப்பார்கள் சறுக்குவார்கள் 


ஆம் 


பனிப் பொழிவின் 


பெரு மௌனத்தின் பின் 


இங்கு ஒரு 


சிறு கலவரம் நடக்கவுள்ளது


தியா - காண்டீபன்

மார்ச் 25, 2024

அதிகாலை 3:30

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.