பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகள் தொடர்பாக பாடசாலைகளுக்கு உடனடி அறிவிப்பு!


இந்த நாட்களில் பாடசாலைகளில் இல்ல விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையை கருத்தில் கொண்டு பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை நடத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.


இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் .


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பின்னர் இல்ல விளையாட்டு போட்டிகளை மீண்டும் தொடருமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.