வரலாற்றில் இன்று-MARCH02
1903 – பெண்களுக்கு மட்டுமான முதலாவது உணவு விடுதி, மார்த்தா வாசிங்டன் ஓட்டல், நியூயார்க் நகரில் திறக்கப்பட்டது.
1917 – புவேர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.
1919 – முதலாவது பொதுவுடைமை அனைத்துலகம் மாஸ்கோவில் நடைபெற்றது.
1930 – மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.
1935 – சியாம் மன்னர் பிரஜாதிபோக் (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் ஆனந்த மகிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார்.
1939 – கர்தினால் இயூசினோ பசெலி பன்னிரண்டாம் பயசு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: முதலாவது செருமனியப் படைகள் பல்கேரியாவினுள் நுழைந்தன.
1943 – இரண்டாம் உலகப் போர்: பிஸ்மார்க் கடல் சமரின் போது அமெரிக்க மற்றும் ஆத்திரேலியப் படைகள் சப்பானியக் கப்பல்களை தாக்கி மூழ்கடித்தன.
1946 – ஹோ சி மின் வட வியட்நாமின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1955 – கம்போடியா மன்னர் நொரடோம் சீயனூக் பதவி விலகினார். அவரது தந்தை நொரடோம் சுராமரித் கம்போடிய மன்னராக முடி சூடினார்.
1956 – மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1958 – தி.மு.க. இந்திய மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
1962 – பர்மாவில் இராணுவத் தளபதி நெ வின் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1969 – பிரான்சின் துலூஸ் நகரில் ஆங்கிலேய-பிரெஞ்சு கான்கோர்டு விமானம் தனது முதலாவது சோதனைப் பறப்பில் ஈடுபட்டது.
1970 – ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.
1972 – நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.
1978 – செக் விண்வெளி வீரர் விளாதிமிர் ரெமேக் விண்வெளிக்குச் சென்ற முதலாவது உருசியர் அல்லது அமெரிக்கர் அல்லாத விண்வெளி வீரர் என்ற பெயரைப் பெற்றார்.
1989 – அனைத்து குளோரோபுளோரோகார்பன்களின் (CFC) தயாரிப்பையும் இந்நூற்றாண்டுக்குள் தடை விதிக்க 12 ஐரோப்பிய சமூக நாஅடுகள் உடன்பாட்டுக்கு வந்தன.
1990 – ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.
1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்க்கப்பட்ட தானுந்துக் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
1992 – திரான்சுனிஸ்திரியா போர் ஆரம்பமானது.
1992 – ஆர்மீனியா, அசர்பைஜான், கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், மல்தோவா, சான் மரீனோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உசுபெக்கிசுத்தான் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.
1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.
2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர்.
2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
கருத்துகள் இல்லை