என்னவனே!!

 


என் சொப்பனங்களை

சுந்தரமாக்கிய நித்தியனே,

உன் காந்த விழிக்குள்
இரும்புத் துகளென
ஒட்டிக் கொள்கிறேன்  நான்.

சிலிர்த்தடங்கும்
உன் மீசை முடிக்கு
முதல் ரசிகை
நானே..


நீ பேசி முடிக்குமுன்,
உன் வெண் பற்களில்
அப்படி ஒரு வீச்சு.

நீ சிரிக்கையில்
ஓடி விழும்
உன் கன்னக்குழிக்குள்
விழுந்து தொலைகிறேன்
நான்...

உழைத்துக் களைத்து
முளைக்கும் உன்
வியர்வைத் துளிகளில்
எத்தனை கவிதைகள்......  

தலைமுடி கோதி
நகரும் உன் விரல்கள்
ஒரு ஓவியமாகிறது
என் முன்னே....

கோபத்தில்
கொதித்து நிற்கும்
உன் தோற்றம்
இராவணச் சிற்பமாகிறது.. 

கருமை நிறத்தழகா
கவிதைச் செருக்கழகா
தேவ மித்திரா...

எம் தெய்வீக பந்தத்தில்
நீயும் நானும்
நிறங்களற்ற
ஏகாந்த நிலை கொள்வோம்.

அர்த்தநாரீஸ்வரம் ஒன்றை
அணைத்து மகிழட்டும்
இந்த பூமி....


கோபிகை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.