அமைச்சர்கள் வெளிநாடு செல்ல கட்டுபாடு!
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் பணிகள் அதிகளவாக மேற்கொள்ளும் தேவை அரசாங்கத்துக்கு எழுந்துள்ளது.
இதனால் வெளிநாட்டுப் பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்களுக்கும் அரச உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அவரச கட்டளையை பிறபித்துள்ளார்.
மே தினக் கூட்டத்தின் பின்னர் தேர்தலை கருத்திற் கொண்டு அரசியல் பணிகளை தீவிரப்படுத்த ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை நேரடியாக இலக்காகக் கொண்டு அரசியல் பணிகளை தொடங்குவதற்கான திட்டத்தை ரணில் வகுத்துள்ளார்.
இதனால் இந்த ஆண்டு மேதின பேரணியை மிகப் பெரிய அளவில் நடத்த ரணில் திட்டமிட்டுள்ளார். தற்போது நாடு முழுவதும் தொழில்முறை குழுக்களுடன் கூட்டங்களை நடத்தும் பணியில் ஐ.தே.க ஈடுபட்டுள்ளது.
பல கட்சிகள் மற்றும் குழுக்கள் இணைந்து கொள்ளவுள்ள பரந்த கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் நோக்கில் ரணில் இந்த திட்டங்களை வகுத்துள்ளார்.
ஏற்கனவே, பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான எம்.பி.க்கள் ரணிலுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்துகள் இல்லை