நண்பனின் வீட்டுக்கு வந்தவர் மரணம்!!

 


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கொழும்பு கொட்டேனா பகுதியைச் சேர்ந்த 65 வயதான கிறிஸ்தோபர் சுரேந்திரன் வில்சன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் நண்பர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அவரின் வீடு காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ளது.

குறித்த வீட்டில் வேலை செய்வதற்காக உயிரிழந்த நபரும் அவரது நண்பரும் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்தனர்.

இதன்போது குறித்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் நடத்திவருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.