ஈழத்து தாயின் ஆசை!!
இப்போது நான் பதினெட்டாவது வீட்டில் இருக்கிறேன் என்கிறாள்
அந்த முதிய ஈழ தமிழ் பெண்
1990ல் போரில் ஊர் ஆக்கிரமிக்கபட்டபோது
அவள் தன் வீட்டை இழந்தாள்
இப்போது அவள் பற்கள் விழுந்து விட்டன
அதனால் சொற்கள் கொஞ்சம் பிசுறு கின்றன
முகத்திலும் கைகளிலும்
சுருக்கங்கள்
இந்த முகத்துடன்
அவள் தன் வீட்டை இழந்த நாளில் இருக்க வில்லை
எல்லா மனிதர்களுக்கும் இறுதி ஆசை உண்டு
தன் உயிர் சொந்த வீட்டில் தான் பிரிய வேண்டுமென
எல்லா பிணங்களுக்கும் ஆசை உண்டு
தான்
தன் ஊர் இடுக்காட்டில்
தன் சொந்த பந்தங்களுக்கு அருகில்
புதைக்க பட வேண்டும் என
இந்த ஆசைகளுக்கு இந்த முதிய தமிழ் பெண்ணும் விதி விலக்கல்ல
நினைத்து பார்க்கிறேன் அவளுடைய அந்த பதினேழு வீடுகள் பற்றி
சில வேளை அவள் விரும்பியோ விரும்பாமலோ
பதினேழு விதமான வாழ்க்கை
வாழ வேண்டியும் இருந்திருக்கும்
எல்லா போர் அகதிகளும் நினைப்பது
ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று
34ஆண்டுகள்
அவள் தன் சொந்த வீட்டுக்கு திரும்ப முடியவில்லை
ஆக்கிரப்பாளர்களே
நீங்கள் உங்கள் சொந்த வீட்டில் இருக்கிறீர்களா
ஆம் என்றால் மிக்க சந்தோசம்
நீங்கள் அறிவீர்கள்
மூன்று நாட்கள் இரவில் வீட்டில் வாழும்
சங்கடம்
30ஆண்டுக்கு மேல்
தன் சொந்த முற்றத்துக்கு
திரும்ப முடியாதவரின் வலியை
உணர முடிகிறதா
அவளின் பதினெட்டு வீடுகள்
என்ற வார்த்தை
என்னையும்
மீண்டும் எங்கோ எங்கெங்கோ
காடு மேடு பதுங்கு குழி
வீடற்ற மழை நாள்
உதடு வறண்ட பயணம்
உறவற்ற பிணம் என அலைக்கிறது
கருத்துகள் இல்லை