பிரித்தானியா வருகிறார் ஹரி!!

 


இளவரசர் ஹரி, தனது இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளின் 10ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்காக மே மாதம் பிரித்தானியா வருகிறார்.


அப்போது, அவர், புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ள தனது அண்ணி இளவரசி கேட்டை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இளவரசர் ஹரி பிரித்தானியாவுக்கு வருவதாக கூறியுள்ள விடயம், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்டுக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


தனது தந்தை சார்லஸ், அண்ணன் வில்லியம், அண்ணி கேட், தந்தையின் இரண்டாவது மனைவியான கமீலா, என ஒருவரையும் விடாமல் தொலைக்காட்சி பேட்டிகளிலும், தனது சுயசரிதைப் புத்தகத்திலும் கிழித்துத் தொங்கவிட்டு,



அவர்களுக்கு நீங்கா தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டு, இப்போது அண்ணியைப் பார்க்க ஹரி வருவதாக கூறியுள்ளதால், வில்லியமும் கேட்டும் பதற்றமடைந்துள்ளதாக ராஜ குடும்ப எழுத்தாளரான டாம் க்வின் (Tom Quinn) என்பவர் தெரிவித்துள்ளார்.


அதைவிட பெரிய பிரச்சினை, ஹரியுடன் அவரது மனைவி மேகனும் வருவாரா என்னும் கேள்வி மேலும் கூடுதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.