நெத்திலி நெத்திலி கருவாட்டு குழம்புமீன் வறுவல் செய்வது எப்படி?


தேவையான பொருள்கள்


நெத்திலி கருவாடு - 1 கப்


கத்திரிக்காய் - 3 (நறுக்கியது)


மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்


மல்லித் தூள் - 1 டீஸ்பூன்


சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்


மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்


மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்


வறுத்த அரிசி மாவு - 1 டீஸ்பூன்


வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)


தக்காளி - 1 (நறுக்கியது)


துருவிய தேங்காய் - 1/2 கப்


புளி - 1 எலுமிச்சை அளவு


கறிவேப்பிலை - சிறிது


கடுகு - 1 டீஸ்பூன்


பூண்டு - 5 பற்கள்


எண்ணெய் - 1/2 கப்


உப்பு - தேவையான அளவு


செய்முறை


🍉முதலில் கருவாடை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து கழுவிக் கொள்ள வேண்டும்.


🍉பின்னர் புளியை நீரில் 3 கப் தண்ணீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.


🍉பின்பு தேங்காய் மற்றும் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.


🍉பின் அதனை புளிச்சாற்றில் சேர்த்து கலந்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தக்காளியை சேர்த்து கையால் நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


🍉அடுத்து பூண்டை தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


🍉தயிர் சிக்கன் கிரேவி பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து, பின் கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.


🍉பின் அதில் கருவாடை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள், வறுத்த அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு வதக்க வேண்டும்.


🍉பிறகு அதில் புளிக் கரைசலை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.